
கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே என்று சொல்வார்கள், எனது சென்ற கதை பலரையும் கவர்ததால் மேலும் எனது கதை பயணத்தை தொடருகிறேன்.
"டிங்.." கோவிலில் அடித்த மணி ஓசை கேட்க்கும் துரத்தில் தான் அந்த வீடு. விட்டின் எல்லா கதவுகளும் மூடப்பட்டு இருந்தது. நான் ஒரு சன்னல் வழியாக விட்டின் பின் புறத்தில் இருக்கும் சிறு குளத்தை கண்டு கொண்டு இருந்தேன்.
அங்கே சற்றே அடுப்பில் இருந்து இறக்கி வைக்க பட்ட வெந்நீர் நிரப்பப்பட்ட இரண்டு அண்டாக்களில் ஒன்றில் வனத்தை பார்த்ததுபோல் வாய் திறந்து கொண்டு அந்த வெண் நீரிலே மிதந்து கொண்டு இருக்கும் ஒரு சொம்பும் என் கண்களுக்கு தென்பட்டது.
அங்கே யாரோ குளிப்பதற்காக சந்தானம் பன்னீர் வெந்நீர் மற்றும் செம்பருத்தி பெரியநெல்லி சீகக்காய் வெந்தயம் கற்றாளை போன்ற பொருட்கள் போட்டு நீர் விட்டு குழைத்த கலவையும் அங்கே இருந்தது. மேலும் முன்றளவு நல்லெண்ணெய் இரண்டளவு வேப்பெண்ணை ஓரளவு தேங்காய் என்னை என்று மேற்குறிய அளவுகோலில் கலந்த என்னை கலவையும் அங்கே இருந்தது.
அங்கே அந்த மணி ஓசை அடங்கும் முன்னே குளத்து நீரில் இருந்து ஒரு பெண் எழுந்து வந்தால். அவள் அங்கு இருந்த சொம்பில் வெந்நீர் எடுத்து தனது தலையில் ஊற்றினால். அவ்வாறு அவள் ஊற்றி முடித்ததும் அவள் தலையில் இருந்து சொட்டிய நீர் மழை விட்ட தூறல் போல் இருந்தது.
அவள் தனது இருகைகளும் முவேன்னை எடுத்து தனது தலையில் ஊற்றியது கார் மேகத்தை குளிக்கவைத்து போல் இருந்தது. சட்டென நான் எதிர் பாரத விதமாக அவள் தனது உடையை எடுத்து விசினால். அந்த உடை தென்றலை தழுவிக்கொண்டு என் முகத்தில் வந்து விழுந்தது. நான் அந்த ஈர உடையை எடுத்து பார்த்தல் பளிச்சென்று என் கண்கள் கூசும் படியாக ஒளி விசியது.
ஒளியை கண்டு கண்கூசியதால் அது எங்கிருந்து வருகிறது என்று கண்டு பிடிக்க முடிய வில்லை. பிறகு அவனுக்கு அவனது நண்பன் குரல் கேட்டது "சிக்கிரம் வாடா நேரம் ஆகிடுச்சி". பின்பு நான் கண்ணை கசக்கி விட்டு பார்த்தேன் அங்கே இருந்த குண்டு மின்விளக்கு தான் என் கண்ணை கூச காரணம் என அறிந்தேன். நானும் சென்று குளித்துவிட்டு என் நண்பனும் நானும் பேருந்தில் மகாபலிபுரம் சென்றோம். பயணத்தின் போது நான் அந்த வீட்டில் கண்ட கட்சயை சொன்னேன் அதற்க்கு அவன் என்ன சொல்கிறாய் நீ என்னோடு தானே இருந்தாய் எப்படி உன்னால் நீ சொன்ன வீட்டுக்கு சென்று இருக்க முடியும் என்றான். அப்போது தான் எனக்கே தெரிந்தது அது கனவு என்று ஏன் என்றால் நான் மணி ஒலித்ததாக கூறிய கோவில் எங்கள் விட்டின் அருகே தான் உள்ளது ஆனால் அங்கே நான் கேட்டது போல் மணியே இல்லை ஓசை எப்படி வரும்.
பின்பு ஒரு வழியாக மகாபலிபுரம் சென்றோம். அங்கே நான் கண்ட கட்சிகள் என்னை வெகுவாக கவர்ந்தன, ஒரு வேலை நாம் பல்லவ அரசர் ஆட்சிக்கு உட்பட்ட நகரத்துக்கு வந்துவிட்டோமோ என்றும் தோன்றியது. அங்கே உளி கல்லில் ஆடிய நடனம் என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக ஆனது. இதற்க்கு முன்பே நான் மகாபலிபுரம் வந்து இருக்கிறேன் அப்போது சிலைகள் பல கண்டதும் உண்டு ஆனால் சிற்பம் வடிக்கும் அழகை இப்போது தான் முதல் முறை காண்கிறேன்.
நானும் என் நண்பனும் அங்கே இருந்த கடற்கரைக்கு காற்று வாங்க சென்றோம். அங்கே அழகிய கற்கோயில், விளையாடி கொண்டிருந்த குழந்தைகள், பார்வையிலே தனை மறந்த காதலர்கள், சிற்பம் வடிக்கும் சிற்பிகள், தமிழ் மண்ணில் தமிழ் அறியாது மழலை மொழி பேசும் பிள்ளை என கட்சிகள் இருந்தன. இவ்வாறு இருந்த போதிலும் எதையும் எங்களை காண விடாமல் விசிய தென்றல் கண்சொருக வைத்து விட்டது. திடீர் என நான் கண்திரந்ததும் ஆழி பேரலை எங்களை நோக்கி பாய்ந்து வந்தது உடனே என் நண்பனை எழுப்பி நாங்கள் இருவரும் எழுந்து ஓட ஆரமித்தோம். எங்கள் வேகத்தை விட வேகமாக வந்த பேரலை எங்களை மண்ணில் தள்ளி எங்கள் மேல் பாய்ந்து ஓடியது. பிறகு மெல்ல பின்வாங்கி நீர் வற்றி போனதும் நான் எழுந்து பார்த்தால் என் நண்பனை காண வில்லை. ஆனால் அவன் என்னை அழைப்பது மட்டு கேட்டது நான் அழுதுகொண்டே இருந்தேன். ஆனால் நான் முழுவதும் நினைந்து இருந்ததையும் என் நண்பன் காண வில்லை என்பதையும் தவிர என்னக்கு எதுவும் நினைவு இல்லை.
முடிவில்லா பயணம் தொடரும்...
கதைபயனதுடன்
சதீஷ்
No comments:
Post a Comment